அரசுப்பள்ளிகளும்-பராமரிப்பும்..









அரசு/ நகராட்சிப்பள்ளிகளைப்பராமரிக்க


சில ஆலோசனைகள்.......

















அரசுப்பள்ளிகளும் பராமரிப்பும்..

தமிழக அரசின் சார்பாக நடத்தப்படும் அரசு பொதுமருத்துவமனைகள்,அரசு போக்குவரத்து பேருந்துகள், அரசு, நகராட்சி,ஊராட்சிப்பள்ளிகள் போன்றவற்றிற்கு பொதுவான குறைபாடாக மக்களாலும்,ஊடகங்களாலும் சொல்லப்படுவது ஒன்றே ஒன்றுதான்! அது போதிய பராமரிப்பின்றி ,சுத்தமின்றி காணப்படுவதுதான்.

அரசுப்பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள் கட்டப்படும்போது நன்றாகத்தான் இருக்கிறது.மாணவர்களின் வசதிக்காக வாங்கப்படும் இருக்கை வசதிகள்,அலமாரிகள்,கணிப்பொறிகள் போன்றவைகள் மட்டுமல்ல, வகுப்பறைக்கட்டங்கள் உட்படபோதியபராமரிப்பின்றியும்,முரட்டுத்தனமானகக்கையாளுவது போன்றவைகளால் விரைவில் சிதிலமடைந்து விடுகிறது.பெரும்பான்மையான பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு தான் ஓய்வு பெறும்போது, எந்தவிதமான புகாரின்றி,தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட. தன்னால் வாங்கப்பட்ட அனைத்துப்பொருள்களையும் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து பென்சனை பாதுகாத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்..மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட தளவாடச்சாமாண்கள் உடைந்துபோனால்
அதைப்பராமரித்து மீண்டும் மாணவர்கள் பயன்படுத்தச்செய்வதில்லை.இப்படி திறந்த வெளியில் கிடப்பவையெல்லாம் ஓட்டை உடசல்கள் அல்ல! நல்ல நிலைமையில் இருப்பவைதான்..இப்படி வெய்யிலிலும், மழையிலும் கிடந்தால் சில மாதங்களில் கரையான்களுக்கு இரையாவதைத்தவிர வேறில்லை..இவையெல்லாம் மாணவிகளின்கல்விக்கட்டணத்தால்,பொற்றோர் ஆசிரியர் கழகத்தின் நன்கொடை போன்றவற்றால் வாங்கப்பட்ட பள்ளிச்சொத்துக்களாகும்.இவை தேசத்தின் சொத்துக்களாகும்..இவைகளை இப்படி போட்டு வைப்பதையும் ஒரு குற்றமாகக்கருத வேண்டும்.

இது தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பழமையான நல்ல நிலைமையில் இரு ந்த பீரோ! ஏதோ ஒரு காரணத்திற்காக பள்ளிக்குள் இருந்து வெளியே மைதானத்தில் நிறுத்தி வைத்தது, பலமான காற்று காரணமாக கீழே விழு ந்து விட்டது..மரம் கூட விழுந்துள்ளது! பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை..சில நாட்களுக்குப்பிறகு ரூ.15000/-மதிப்புள்ள இந்த பீரோவின் நிலையைப்பாருங்கள்....


இதுவே தலைமையாசிரியர் அல்லது ஆசிரியரின் சொந்த சொத்தாக இருந்தால் இப்படி விடுவார்களா?

பள்ளியின் சுவற்றில் பறவைகளின் எச்சம் காரணமாக மரம் முளைக்கும்..உடனே அதை சுவறில் இருந்து அகற்றி, அதன் வேரில் ஆசிட் அல்லது மெர்க்குரியை ஊற்றினால் மரம் பட்டுவிடும்..அப்படியே விட்டால் என்னவாகும்! மரம் பெரிதாகும்..வேர்கள் சுவற்றைப்பிளக்கும்..கட்டடம் பலவீனப்பட்டு ஒரு நாள் விழும்...மாணவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால்..வரும் முன் காப்பது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும்..

சமீபத்தில் உடுமலை வட்டத்தில் ஒரு நடு நிலைப்பள்ளியின் உபயோகிக்கமுடியாத வகுப்பறைக்கு அருகே இருந்த வகுப்பறையில் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தபோது, தலைமையாசிரியர் அங்கு வருகிறார்..அருகில் உள்ள வகுப்பறையின் நிலைமை கண்டு மாணவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். மாற்றிய ஒரு மணி நேரம் கழித்து பழுதான வகுப்பறைச்சுவர் விழு ந்து மாணவர்கள் படித்துக்கொண்டிரு ந்த வகுப்பறையும் விழுகிறது..30 மாணவர்கள் தலைமையாசிரியரின் வரும் முன் பாதுகாப்பால உயிர்பிழைக்கின்றனர்.கீழே உள்ளது ஒரு பள்ளியில்

உள்ள வகுப்பறைதான்.இதைப்போல உள்ளவற்றை அகற்ற பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை தலைமையாசிரியர் எடுக்கவேண்டும்..அவர் நினைத்தவுடன் அகற்ற முடியாது..கல்வித்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்..பொதுப்பணித்துறை அதிகாரிகளைப்பல முறைபார்க்கவேண்டும். நடையாய் நடக்கவேண்டும்..என்ன செய்வது! செய்து தான் ஆகவேண்டும்.

தற்போது மழை பெய்து கொண்டுள்ளது..ஆமாம் !அதற்கென்னஎனக்கேட்கிறீர்களா? இன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் சர்வ சிக்‌ஷான் அபியான் மூலமாக கான்கிரீட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன..மேல் நிலைப்பள்ளிகள் எல்லாம் மாடியுடன் கூடிய வகுப்பறைகளில் தான் செயல்படுகின்றன. மரங்கள் இல்லாத பள்ளிகளைப்பார்ப்பது அரிது..பள்ளிகளின் மேல்தளத்தில் மரம் செடிகளின் இலைகள், குப்பைகள் படிந்திருக்கும். மழை நீர் வெளியேறும் குழாயில் இவைகள் அடைத்துக்கொண்டிருந்தால் மழை நீர் வெளியேறாமல் மாடியிலேயே தேங்கிவிடும்..இப்படி தேங்கும் மழை நீர் கான்கிரீட்டில் புகு ந்துவிடும். நாளைடைவில் கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பூச்சுகள் பெயர் ந்து வகுப்பறைகள் விழும் அபாயம் ஏற்படும்.
மொட்டை மாடியில் சவுண்டால் இலை,காயகள்,விதைகள் அடைத்துள்ளன.

தண்ணீர் போக வழி இல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீர்..














(2-12-10 அன்று திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியின் வகுப்பறை இரவு விழுந்தது. நல்ல வேளை பகலில் விழவில்லை! நன்றி தினகரன் 3-12-2010)
வகுப்பறையின் உள் சுவரில் நீர் கசிவு ஏற்பட்டு சுவர் ஈரமாக உள்ளது.


அடைப்புகள் நீக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகிறது.
















அட போங்கப்பா...ஆசிரியர்களாகிய நாங்கள் இதையெல்லாம் மாடி மேலே ஏறி பார்க்கச்சொல்கிறீர்களா? நாங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடம் நடத்துவதா?அடிக்கடி நடக்கும் பயிற்சிகளுக்குச் செல்வதா? மக்கள் தொகை கணக்கெடுக்கச்செல்வது போன்ற எத்தனையோ வேலைகள்..அதில் இதெல்லாமா நாங்கள் பார்ப்பது? இதெல்லாம் பொதுப்பணித்துறையினரின் வேலை! நகராட்சியின் வேலை..என்பீர்கள்..ஓரளவு உண்மை இருக்கலாம்..ஆனால் இது நமது சமுதாயக்கடமை...

வீசும் காற்றுக்கும், பாயும் ஆற்றுக்கும் இலக்கில்லாமல் இருக்கலாம்...
ஆனால்..................... நாம் மனிதர்கள்...அதுவும் ஆசிரியர்கள்..எதிர்காலச்சமூகத்தை உருவாக்கும் பிரம்மாக்கள்..... நம்மால் முடியாவிட்டால் பள்ளியில் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கூறினால் அவர்கள் செய்து விடுவார்கள்...


1200 ச.அடி பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட குப்பையின் ஒரு பகுதி..

சுத்தம் செய்யப்பட்ட மாடியின் தோற்றம்..விரிசல்கள் உள்ளன. இவற்றைக்கொத்தி மீண்டும் பூச வேண்டும்.அப்போது தான் மழை நீர் கான்கிரீட்டிற்குள் செல்வதைத் தடுக்கமுடியும்....அரசு, நகராட்சிப்பள்ளிகளை துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கமுடியும்..

இதைப்பாருங்கள்.........



தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் அதிபர்களுக்கு சமூக அக்கறையே கிடையாது என்பதற்கு இது போன்ற ஆபாசமான சினிமா போஸ்டர்களை அரசு/ நகராட்சிப்பள்ளிகளின் சுவரில் ஒட்டுவதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.அவரா ஒட்டுகிறார் எனக் கேட்கிறீர்களா?அவர்கள் வந்து ஒட்டுவதில்லை.ஆனால் ஒட்டும் நபரிடம் பள்ளிச்சுவர்களில் ஒட்டாதே எனக்கூறலாம் அல்லவா? நோட்டிஸ் ஒட்டாதீர்கள் என எழுதி வைத்திருந்தாலும் ஒட்டிவிடுவார்கள்.எ ந்த தலைமையாசிரியரும் போலீசில் புகார் செய்வதில்லை.. நமக்கேன் வம்பு..என்ற எண்ணம் தான்..சில சமயம் பத்திரிக்கைகள் இது மாதிரி போஸ்டர்களை எடுத்துப்போட்டவுடன் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்.



ஒரு மாதம் ஒட்ட மாட்டார்கள்.பின்பு ஒட்ட ஆரம்பித்து விடுவார்கள்.இதை எப்படி தடுப்பது? பள்ளிச்சுவரில் முதலில் ஒரு சிறிய போஸ்டர் ஒட்டியிருந்தால் கூட உடனே சம்ப ந்தப்பட்டவர்களிடம் போனில் கூப்பிட்டு புகார் செய்து அவர்களையே சுத்தம் செய்யச்சொல்லலாம்...அவர்கள் செய்யவில்லையென்றால் பள்ளி நிர்வாகமோ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரோ கூட இதைச்செய்யலாம்.


சுத்தம் செய்த பின்பு சுவரை அப்படியே விடக்கூடாது. நகரில் உள்ள பிரபல வியாபார நிறுவனங்களை அணுகி பள்ளி பெயர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்களை எழுதிவைக்கலாம். கால் பகுதி அவர்களின் விளம்பரத்தையும் எழுதிக்கொள்ளச்சம்மதித்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் முன்வருவார்கள். கீழே பாருங்கள்....புரியும்....








பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!

Comments

  1. //வீசும் காற்றுக்கும், பாயும் ஆற்றுக்கும் இலக்கில்லாமல் இருக்கலாம்...
    ஆனால்..................... நாம் மனிதர்கள்...//

    நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

    படங்களுடன் தெளிவான ஆலோசனைகளை முன்வைத்துள்ளீர்கள். மாற்றங்கள் மலரும் என நம்புவோம். நல்ல பதிவு.

    ReplyDelete
  2. Being an ex-student of Jaivabai, i'm really proud of your efforts Eswaran anna!!! How s Indu?

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான ஒன்று..

    ReplyDelete
  4. கருத்துத்தெரிவித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..