Posts

Showing posts from June, 2010

அந்தமான் செல்லுலர் ஜெயில்...

Image
அந்தமான் செல்லுலர் ஜெயிலின் தற்போதைய பருந்துப்பார்வை புகைப்படம். ஏழு பிரிவாக தாமரை இதழ் போலக் கட்டப்பட்ட ஜெயில் இரண்டாம் உலகப்போர் மற்றும் 1941-ன் பூகம்பம் காரணமாக சேதமடைந்தன. இந்திய அரசு இதை இடித்து அந்த செங்கற்களைக்கொண்டே ஜி.பி.பந்த் பெயரில் மருத்துவ மனையைக்கட்டியது. மீதியையும் இடித்திருப்பார்கள்! அதற்குள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை பெற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்து, 1979 பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்ளத்திறந்து வைத்தார். சுதந்திரபோராட்டவீரர்கள் செல்லில் பயன் படுத்திய 1.உணவு. 2.குடி நீர்க்குவளை.3.இயற்கை உபாதை(மலம்,சிறு நீர்)பாத்திரம்.இதை அவர்களே சுத்தம்செய்து கொள்ளவேண்டும். தேங்காய் மட்டைவாங்கி,செக்கில் எண்ணெய் ஆட்டவேண்டும்,தேங்காய் மட்டையில் இருந்து கயிறு திரிக்கவேண்டும்.ஓய்வெடுத்தால் சாக்கிலான உடை மாட்டப்பட்டு, கீழே உள்ள படம்போல கழுத்து ,கை,இடுப்பு,கால்களில் விலங்கு மாட்டப்படும். முதல் இ ந்திய சுத ந்திரப்போரில் கைது செய்யப்பட்டவர்களை தூக்கில

அந்தமான்...புண்ணிய பூமி!

Image
திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எல்.டி.சியைப்பயன்படுத்தி மே 2 , 2010 முதல் மே 6 வரை வங்கககடலில் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் உள்ள பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் அ ந்தமான் தீவுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அ ந்தமான் தீவுகளின் அதியற்புதமான இயற்கைக்காட்சிகளும்,கடலுக்கடியில் வர்ணஜாலம் காட்டும் பவளப்பாறைகளும் பார்ப்பதற்கு,காணக் கண்கோடி வேண்டும் என்று கூறுகிறார்களே அது அ ந்தமானைப்பார்த்துத்தான் சொல்லியிருப்பார்களோ என்னவோ! நானும் அப்படித்தான் நினைத்தேன் மே 5-ல் செல்லுலர் ஜெயிலைப்பார்க்காத வரையில்! வியாபாரம் செய்யவ ந்த வெள்ளையர்கள் ,பிரித்தாளும் கொள்கையால் இ ந்திய மன்னர்களையும், இ ந்தியமக்களை யும் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்த போது பல்வேறு எதிர்ப்புகள் ஆங்காங்கே வ ந்தாலும் கணிசமான அளவில் பல மன்னர்கள் ஒன்றினைந்து 1857 -ல் போராடினார்கள். இப்போராட்டத்தை ஆங்கிலேயர்கள் சிப்பாய் கலகம் என்று கூறி கடுமையான முறையில் அடக்கினார்கள். இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களை இ ந்தியாவில் வைத்திரு ந்தால் தங்கள்