கட்டாயஇலவசக்கல்விச்சட்டமும், பள்ளிமேலாண்மைக்குழுவும்..
கட்டாய இலவச கல்வி சட்டம்..2009 இந்திய அரசியல் சட்டம் 1950-ல் உருவாக்கப்பட்ட போது வழிகாட்டும் கொள்கையில், 1960 க்குள் 6 வய்து முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் கல்வியை கட்டாய இலவச சட்டமாக இயற்றியிருந்தன..ஆனால் நாம் மட்டுமே கல்வியை அடிப்படை உரிமையாக்காமல் , வழிகாட்டும் கொள்கையில் எழுதி வைத்தோம்.., வழி காட்டும் கொள்கை என்பது கை காட்டி மரம் போல...போகும் வழியைக்காட்டுமே தவிர ..போகாது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இந்திய மாணவர் சங்கமும் ,ஆசிரிய இயக்கங்களும் கல்வியை கட்டாயமாகவும், இலவசமாகவும் தர வேண்டி பல்வேறு இயக்கங்களை நடத்தினர். உச்ச நீதி மன்றமும் கல்வியை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்புகூட செவிடன் காதில் ஊதிய சங்காகப்போய்க்கொண்டிருந்தது..இந்த நிலையில் தான் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசு இடது சாரிகளின் ஆதரவுடன் 2