Posts

Showing posts from June 26, 2011

நல்லதோர் வீணை செய்தே....

Image
      நல்லதோர் வீ ணை செய்தே!...                          ...    புதிய தமிழகரசு பதிவியேற்றவுடன் சுமார் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தைப்புறக்கணித்துவிட்டது...ஏன்..இது முன்பிருந்த முதல்வர் கருணா நிதியால் கட்டப்பட்டது என்ற ஈகோதான்..புதிய தலைமைச்செயலகம் என்னவாகும்..இன்னும் சில மாதங்களில் பராமரிப்பின்றி வைக்கப்பட்டு செடி கொடிகள், செயற்கை நீருற்றுக்கள் போன்றவைகள் கவனிப்பாரற்று அழியும்...கண்கவர் கலைப்பொருட்கள் , மேஜை நாற்காலிகள் காணாமல் போகும்... ஆக மொத்தம் மக்கள் வரிப்பணம் அத்தனையும் ஒரு முன்னாள் முதல்வர் மீதான வெறுப்பு, தேசத்தின்பொதுச்சொத்தைக்கரையான் பிடித்துபோகச்செய்வதாக இருக்கிறது....      .இதாவது ஒரு புதிய ஆட்சி வந்ததால் புதிய தலைமைச்செயலக ம் புறக்கணிக்கப்பட்டது என்று கூறலாம்..ஆனால் புதிய ஆட்சி வராமலேயே ஒரு இருபது நாள்   தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஏப்ரல் 13 க்குப்பிறகு புதிய தலைமைச்செயலகம் வந்த  முதல்வர் கலைஞர் அவர்கள் அங்கிருந்த மீன் தொட்டியைப்பார்க்கிறார்..பாசம் பிடித்து கிடக்கிறது. உடனே அங்கிருந்த அதிகாரிகளைப்பார்த்து என்ன பராம