Posts

Showing posts from April, 2020

காகமும் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும்!

Image
                                காகமும் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும்....           இன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் உள்ள  பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் சி..பி.எஸ்.ஈ. பள்ளியில்      தாத்தா - பாட்டி தினவிழாவிற்கு  ஏற்பாடு செய்திருந்தார்கள்.         நானும் இதில்   விருந்தினராக   கலந்து கொண்டேன்.  என்னைப்போல அப்பிச்சிகளும் ,- அம்முச்சிகளும் , தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்திருந்தார்கள் ..குழந்தைகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டுகளும், தாத்தா பாட்டிகளுக்கும் போட்டியும், அவர்கள் கதை சொல்லும் நிகழ்வும் நடந்தது.   என்னையும்  பேச சொன்னார்கள் .. நான் கோழிக்குஞ்சு . பாட்டுப்பாடினேன். கதை சொல்ல சொன்னார்கள். என்ன கதை சொல்வது ? எல்லோருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும் இதில் என் கற்பனைகளைக்கலந்து   குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு நான் சொன்ன கதை ...            காகம் வடை சாப்பிட்ட கதை...!   ஒரு ஊர்லே... இல்லையில்லை... நம்ம பெம் ஸ்கூல் இருக்கிற காங்கயம் ரோட்டில் விஜயாபுரம் என்ற   ஊர் இருக்கிறது. இந்த  ஊரில் சுப்பாத்தா என்ற பாட்டி வடை சுட

மகாபாரதமும் கொரோனாவும்!

Image
  கொரோனாவும்.... மகாபாரதமு ம்..!!! .            கடந்த  இருபது நாட்களுக்கும் மேலாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். வீட்டின் கதவுகளை சாத்திக்கொண்டு, நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம். எதையும் தொடுவதற்கு பயம். கடைக்குச்சென்று வாங்குவதற்கு பயம்! வெளியில் செல்ல பயம்.! ஏடிம் மில் பட்டனைத்தொட பயம்! இப்படி  தினம் தினம் தொலைக்காட்சிகளில் கொரோனா செய்திகளைப்பார்த்து இன்று மனித குலமே கிலி பிடித்து கதிகலங்கிக்கொண்டுள்ளது. இன்று இந்த தனிமைப்படுத்துதல் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.. நமது இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு அரசன் இப்படித்தான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அரண்மனைக்குள் அடைந்து கிடந்தான். யார் அந்த அரசன்? மகா பாரதமே இந்த அரசன் மூலமாகத்தான் நமக்கு கதையாக வருகிறது.           மகாபாரதப்போர் முடிவடைந்து விட்டது. ஹஸ்தினாபுரத்தை ஆண்ட  பாண்டவர்கள் , அபிமன்யுவின் பேரன் பரீட்சத்தை அரசனாக முடி சூட்டிவிட்டு சொர்க்கம் போக இமயமலைக்கு கிளம்பி விடுகிறார்கள். ஒரு நாள் பரீட்சித் வனத்திற்குள் வேட்டைக்குப்போகிறான். வேட்டையாடி களைத்து, தண்ணீர் தாகம் எடுக்கிறது