Posts

சித்திரை 1 தமிழ் வருட பிறப்பா ? சமஸ்கிருத வருட பிறப்பா? தமிழர்களை முட்டாளுக்கும் ஆரியர்களின் புராணப்புரட்டு!

Image
  சித்திரை 1 ம் தமிழ் புத்தாண்டு என்றும், தமிழ் புத்தாண்டு அல்ல அது சமஸ்கிருத புத்தாண்டு என்றும் அல்ல அல்ல இது ஆரிய புத்தாண்டு என்றும் ஊடகங்களில் வருகின்றன. சித்திரை 1 புத்தாண்டு என்பது வேறு சில நாடுகளிலும் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நமக்கு சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்று ஏன் கொண்டாடத்தயக்கம் என்றால் தமிழ் வருடம் என்பது 60 ஆண்டு சுழற்சியில் வருவதால் தான்! அது ஒன்றாவதாக பிரப என்று ஆரம்பித்து அக்சய என்று 60 ஆண்டுகளில் முடிகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள பசலி , சாலிவாகன ஆண்டு, கொல்லம் ஆண்டு, தமிழில் 60 ஆண்டுக்கு மாற்றாக உள்ள திருவள்ளுவர் ஆண்டு, கிரிகோரியன் ஆங்கில ஆண்டுகள் எல்லாம் தொடர் ஆண்டுகளாக உள்ளதால் வரலாற்று நிகழ்வுகளை சரியான முறையில் கணக்கு வைக்க முடியும். ஆனால் தமிழில் உள்ள 60 ஆண்டுக்கணக்கில் நம் வயதைக்கூட சரியாக கணிக்கமுடியாத நிலைமையுள்ளதை நாம் இன்னும் உணரவில்லை. நல்ல வேளை கிரிகோரியன் ஆண்டும், திருவல்ளுவர் ஆண்டும் 2054 ம் இருப்பதால் நாம் பிழைத்தோம்! அதாங்க ஆங்கில ஆண்டு இருப்பதால் நாம் நம் வரலாற்று நிகழ்வுகளையும், நம் வயதையும் சரியாக கூறமுடிகிறது. இது ஒரு புறம் இருந்த

கல்வித்தாஜ்மகால் உருவாக்கிய லட்சுமிதேவி

Image
கல்வித்தாஜ்மகால் உருவாக்கிய லட்சுமிதேவி                                அக்டோபர் 31 ம் தேதி மதியம் 1 மணி சுமாருக்கு எனது போனுக்கு பெயர் தெரியாத ஒரு போனில் இருந்து கால் வருகிறது. நான் யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் பேசுகிறேன்.   எதிர் முனையில் அண்ணா நான் லட்சுமிதேவி கோவையில் இருந்து பேசுகிறேன் என்றவுடன் எனக்கு முகம் ஞாபகம் வந்துவிட்டது. 1985 ம் ஆண்டில் இருந்து எனக்கு   தொலைபேசித்துறையில் முதலில் தற்காலிக தொலைபேசி இயக்குனராக இருந்தார். நான் அங்கம் வகுத்த NFTE சங்கத்தின் மூலம் இவர்களைப்போல நாடு முழுவதும் இருந்த தற்காலிக ஊழியர்களை(RTP)   நிரந்தர ஊழியர்கள் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்து, போராடி நிரந்தரமானவர்களில் இவரும் ஒருவர்.   நான் திருப்பூரில் இருந்தாலும் கோவை தொலைபேசி நிலையத்தில் இவரைப்போல நிறையப்பேர் என்னை அண்ணா என்றே அழைப்பார்கள். 2011ம் ஆண்டு நான் ஓய்வு பெறும் வரை தொடர்பில் இருந்தார்கள். நான் ஓய்வு பெற்றபின் தொடர்பு படிப்படியாக விட்டுப்போய்விட்டது.   அண்ணா, இன்னும் ஜெய்வாபாய்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருக்கிறீர்களா? பள்ளிக்கு செல்வீர்களா? என்றார்.   நான் திருப்பூர் ஜெய்வா

பகவத்கீதை என் பார்வையில்

Image
        சமீபத்தில் வாசித்த நூல் ஸ்ரீமத் பகவத்கீதா!.. இதனை கீதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூலம், பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என 1052 பக்கங்கள்..விலை மிகவும் மலிவு ரூ135-00 மட்டுமே. இந்த வருட ஆரம்பத்தில் நைருதி பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த போது பள்ளியின் சார்பாக நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.      யூதர்களுக்கு பழைய ஏற்பாடு, கிருத்துவர்களுக்கு பைபிள், இஸ்லாமியருக்கு குரான் என்பது போல இந்துக்களுக்கு வேத நூல் பகவத்கீதையாகும். கிருஷ்து தன் சீடர்களுக்கு சொன்னது பைபிள், முகமது அலி(தனக்கு அல்லா சொன்னார் எனக்கூறியது) சொன்னவை குரான், கீதை என்பது பகவான் தன் திருவாயால்  அர்ஜுணனுக்கு அருளியது அல்லது  சொன்னது ஸ்ரீமத்பகவத்கீதா.     பகவத் கீதை 18 அத்தியாயங்கள் கொண்ட( 700 ஸ்லோகங்களை உள்ளடக்கிய ) நூலாகும். அவைகள் பின்வருமாறு 1.அர்ஜுண விஷாத யோகம், 2.ஸாங்க்ய யோகம். 3.கர்மயோகம். 4. ஞானகர்ம ஸன்யாஸ யோகம். 5.கர்ம ஸன்யாஸ யோகம். 6. ஆத்ம ஸம்யம யோகம். 7. ஞான விஞ்ஞான யோகம்.8. அஷர ப்ரஹ்ம யோகம். 9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம். 10. விபூதி யோகம். 11.சிசுவரூப தரிசன யோகம். 12.பக்தி