Posts

Showing posts from November 26, 2014

22 nd NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS-2014.

Image
              திருப்பூர்  மாவட்டத்தில்    22 வது தேசிய  குழந்தைகள் அறிவியல் மாநாடு-2014                                                                              மாநாட்டு சின்னம். அழைப்பிதழ். ஏஞ்சல் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் குழந்தை விஞ்ஞானிகள். மாநாடு  நிறைவுவிழா.. திருமதி.வனிதா செயல் அலுவலர். மாவட்ட தலைவர் ஆ.ஈசுவரன்.  மா நாட்டு துவக்கவுரை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சுப்பிரமணியம்.                           மத்தியரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும், நாடு முழுவதும் உள்ள உள்ளூர் வளங்களைக்கண்டறிதல், பிரச்சனைகளைக்கண்டறிந்து தீர்வு காண்பது போன்றவை இதன் முக்கிய அம்சங்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பொதுத்தலைப்பின் கீழ் 3 மாத காலம் மாணவர்கள் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மாவட்டம், மா நிலம் என தேர்வாகி பின் அகில இந்திய அளவில் டிசம்பர் 27 முதல் 31 வர