அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.
ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும் என்ற தலைப்பில் வந்தவாசி அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் சொல்லப்படாத துயரத்தை கவிதையாக்கி கவிஞர் வெண்ணிலா அவர்கள் 23-2-2011 ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதியதைப்பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் ரூ.9 லட்சம் மதிப்பில் டாய்லெட்டுகளும்,பாத்ரூம்களும் கட்ட பணித்துள்ளார்கள் என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல,பாராட்டுதலுக்கும் உரியதாகும்...இப்பிரச்சனை, இப்பள்ளியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மாணவிகள் அனுபவித்துவரும் மெளனத்துயரமாகும்.
பதினோரு மணிக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்
உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.
தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்
கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.
மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.
(இந்தக்கவிதை ஒரு சமூக அக்கறையுள்ள ஆசிரியையின் பார்வையில் எழுதப்பட்டது. கவிதையில் வரும் அதிகாரக்குரல்கள் ஆசிரியைகளுடையது என்பதுதான் வேதனை.)
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறி பெண்கல்விக்கு முட்டுக்கட்டை போட்ட சமூக அமைப்பைக்கேள்விக்குறியாக்குகிற வகையில் கட ந்த சில பத்தாண்டுகளாக பெண்கள் கல்விச்சாலைகளில் பயின்று வருகிறார்கள். 2011-ல் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி இந்தியளவில் கல்விகற்ற பெண்கள் 65% சதமாகும். இது 2001-ல்(53%) இருந்ததைவிட 12% சதம் அதிகமாகும்.அதே சமயம் ஒன்றாம் வகுப்பில் சேரும் பெண்கள் 8-ம் வகுப்பு வரும்போது இடைவிலகல் அதிகமாக இருக்கிறது. இதற்கு குடும்ப சூழ் நிலைமை மட்டுமல்ல,பள்ளியில் பெண்குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும்,தண்ணீர் வசதியும் இல்லாததும் காரணமாகும். இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்துவகையான பள்ளிகளிலும் 70% பள்ளிகளில் டாய்லெட் வசதி இல்லை! 54% பள்ளிகளில் தண்ணீர் வசதியில்லையாம்! இதன் காரணமாகவே 7 & 8-ம் வகுப்பு வரும்போது வயதுக்கு வந்துவிடுவதால் 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்களாம்!
உங்களின் அனைத்து முயற்சிகளையும் அறிந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நகரத்து அரசுப்பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்னும்போது கிராமத்துப்பள்ளிக்கூடங்களில் கேட்கவே வேண்டாம். கிராமத்துப்பள்ளி ஒன்றில் பல வருடங்களுக்கு முன் ஆசிரியையாக இருந்து இந்த மாதிரி, மற்றும் வெவ்வேறு பிரச்சினைகளை சந்தித்தவள் நான். கிராமத்துப்பள்ளிகளுக்கு என்று விடிவு வருமோ தெரியவில்லை. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அவைகளுக்குக் கிடைத்த வெற்றிகளுக்கும் என் பாராட்டுக்கள்!!
ReplyDeleteMano saminathan avarkalukku,thankal paaradduthalkalukku enathu manamaarntha nanrikal.
ReplyDeleteஅன்புடையீர் வணக்கம்! கிராமப்புற பள்ளிகளின் பால் அக்கறை கொண்ட ஒரு குருவிடம் இருந்து முதன் முதலில் எனது பணிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!எனது 21 வருட அனுபவங்கள் அவ்வப்போது பல்வேறு செயல்பாடுகளின் வடிவில் அரங்கேறும்! யாராவது ஒருவர் ஏதாவது ஒரு அரசுப்பள்ளியை மாற்றுவதற்கு துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன்.
ReplyDeleteஅருமையான கண்டுபிடிப்பு ஐயா! நல்ல சிந்தனையும் கூட! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteSettings - comments - show word verification for comments - என்பதில் No என்பதை தேர்வு செய்யவும் ஏனெனில் நாங்கள் ரோபார்ட் அல்லவே ஐயா :) :) :)
ReplyDeleteThanks sir.
ReplyDelete