படிக்காத மேதை கர்மவீரர் காமராஜருக்கு
திருப்பூர் மாவட்ட
பள்ளிக்கல்வித்துறையின் புகலாஞ்சலி!
தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட தமிழக முன்னாள் முதல்வர் பாரதரத்னா கர்மவீரர்,காலாகாந்தி,படிக்காத மேதை என்றழைக்கப்படுகிற காமராஜர் அவர்களின் பிறந்த நாளை தமிழகரசு கட ந்த மூன்று ஆண்டுகளாக ஜூலை 15 ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடி,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் அருமை,பெருமைகளை,வருங்கால மன்னர்களுக்கு எடுத்துக்கூறிவருகிறது. காமராஜர் ஆட்சி காலம்(1954-1963)பொற்காலம்,அதை மீண்டும் கொண்டுவருவோம் என்று மட்டும் கூறிக்கொண்டு,அவர் பயன்படுத்திய காரைக்கூட காப்பாற்றாமல்,பராமரிக்காமல் காயிலான் கடையில் கிடக்கும் கார் போல அவருடைய பெயர் தாங்கிய பிரம்மாண்டமான மாளிகையில் கேட்பாரற்று ( நன்றி: தினமணி 15-7-2010)கிடக்கின்ற செய்தியைப்படித்து வேதனையுற்ற உள்ளங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் காமராஜரின் சாதனைகளை அறியும் வண்ணம்,மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அமுல்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காமராஜர் அவர்களின் 108வது பிறந்த நாள் விழா திருப்பூர் வீரபாண்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவின் புகைப்படக்காட்சி உங்கள் பார்வைக்கு....
நன்றியுரை கூறும் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.பெ. நடராஜன் அவர்கள்.
படித்தமைக்கு நன்றி! உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது!
Comments
Post a Comment