உலக மாணவர் தினமாக கொண்டாடுவோம்!




உலக மாணவர் தினவிழா! பாரத ரத்னா டாக்டர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம் (15-10-2010) அவர்களின் 80 வது பிறந்தநாள்!

(புகைப்படங்களை பெரிதாக்க கிளிக் செய்யுங்கள்)
14-10-2010 அன்று இரவு 10 மணிக்கு,அப்துல் கலாம் அவர்களின் இணைய தளத்தில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை மின்னஞ்சலில் அடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது ...ஒரு போன். சார்! நான் பார்த்திபா பேசுகிறேன்..எனக்கு ஒரே குழப்பம்.யார் பார்த்திபா?.சார் நான் தான் ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவி..டெல்லிக்கு ஜனாதிபதி அவர்களைப்பார்க்க வ ந்தவர்களில் நானும் ஒருவள் சார்! நமது ஜனாதிபதி அவர்களுக்கு நாளை 80 வது பிறந்த நாள்..பள்ளியில் வருடா வருடம் அவருடைய பிறந்தநாளைக்கொண்டாடுவீர்கள்..இந்த வருடம் உண்டா சார் என்றார். நான் தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பில் இல்லை.!.பள்ளியில் கொண்டாடுவார்களா எனத்தெரியாது..ஆனால் 15-10-2010 அன்று மத்தியரசின் நிதியுதவியுடன் ” இன்ஸ்பியர் அவார்டு” என்கிற அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. நமது பேரண்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளன்று இக்கண்காட்சி நடைபெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.இக்கண்காட்சியில் அறிவியல் மாதிரிகளை செய்வதற்கு ஒவ்வொரு மாணவனுக்கும் மத்தியரசு ரூ.5000/-ம் வழங்கியுள்ளது.. நாளை பள்ளிக்கு வந்தால் நூற்றுக்கணக்கில் மாணவ அப்துல்கலாம்களைக்காணலாம் என்றேன்.

சார் எனக்குமட்டுமல்ல பல பேர்களுக்கு 15-10-2010 அன்று யுனெஸ்கோ நிறுவனம் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை உலக மாணவர்தினம் என்று அறிவித்துள்ளது என எஸ்.எம்.எஸ்.வருகிறது..அது உண்மையா எனத்தெரியவில்லை.. ஆனால் நாம் கொண்டாடுவோம் என்றார். எப்படி என்றேன்.. நாமெல்லாம் டெல்லி போய் அவரைப்பார்த்தமில்லையா?அதை உங்கள் பிளாக்கில் போட்டு கொண்டாடுவோம் என்றார்.


நமது கல்விக்கூடங்களில் வருடத்திற்கு ஒரு முறை கல்விச்சுற்றுலாவிற்கு மாணவ மாணவிகளை தமிழ் நாட்டிற்குள் அழைத்துச்செல்வார்கள்.இது மாணவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டும் நமது நாட்டின் பல்வேறு இடங்களில் வாழும் மக்களின் கலாச்சாரம்,மொழி,பண்பாடு போன்றவற்றை நேரில் காண்கின்ற கல்வியாகவும் கொள்ளலாம்..அரசுப்பள்ளிகளில் சென்னை,கன்னியாகுமரி,மதுரை,கொடைக்கானல்,ஊட்டி, மைசூர்,கேரளா தவிர வேறு மாநிலத்தைத்தொட்டதில்லை..மெட்ரிகுலேசன் பள்ளிகளில் டெல்லி,சிம்லா,ஜெய்பூர் எனக்கலக்குவார்கள்..திருப்பூரில் ஒரு சில மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சிங்கப்பூர்,மலேசியா எனப்பின்னியெடுக்கிறார்கள்.

அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெற மத்தியரசு ரயில்களில் சுற்றுலா செல்ல மாணவர்களுக்கு சலுகையளிக்கிறது.ஆனால் இச்சலுகையைப்பெற ரயில்வே கோட்ட அலுவலகம் சென்று கொஞ்சம் அலைய வேண்டும்..இதற்குப்பயந்தே பல பள்ளி நிர்வாகங்கள் தமிழகத்தைத்தாண்டி செல்வதில்லை..ரிஸ்க் எடுப்பதில்லை!திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழகப்பொறுப்பில் இருந்த நானும், தலைமையாசிரியையாக இருந்த திருமதி.ஜரீன்பானு பேகம் அவர்களும் 2005-ம் ஆண்டு அரையாண்டுத்தேர்வு விடுமுறையின் போது ,அரசுப்பள்ளிகளின் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுகின்ற( அதாவது தமிழகத்திற்குள்ளேயே சுற்றுலா செல்வது)சுற்றுலா மெளனத்தைக்கலைக்கவிரும்பினோம்...அது தான் டெல்லிச்சுற்றுலா?

டெல்லிச்சுற்றுலா என சுலபமாக முடிவெடுத்துவிட்டாலும் மாணவிகளின் குடும்பச்சூழ் நிலைமை இடம்கொடுக்குமா? ரூ.3000-ம்வரை செலவாகும்..மாணவிகளால் தரமுடியுமா? இருபது சேர்ந்தால போதும்..டெல்லிச்சுற்றுலாக்கனவை நிறைவேற்றிவிடலாம் என நினைத்தோம்..ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத அளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்ப முன்வந்தனர்.105 மாணவிகளுக்கு மேல் ரயிலில் இடம் கிடைக்காததால் பல மாணவிளை அழைத்துச்செல்லமுடியவில்லை என்பது வருத்தமே!இப்பள்ளி மாணவிகளில் பல பெற்றோர்கள் கூலிவேலைக்குச்சென்றாலும் தனது மகள் டெல்லியைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல்காரணமாக கடன் வாங்கவும் தயங்கவில்லை. ஒரு மாணவிக்கு அப்பா இல்லை..அம்மா மட்டுமே ! அவரும் கூலிவேலைக்குத்தான் செல்கிறார்..அவருடைய நிலைமை தெரிந்து அம்மாணவியை டெல்லிக்கு வேண்டாம்,.அம்மாவிற்கு கஷ்டத்தைக்கொடுக்காதே எனக்கூறி மறுத்தோம்..


அடுத்த நாள் அம்மாணவியின் அம்மா பள்ளிக்கு வந்தார். எனது மகளை டெல்லிக்கு ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? எனக்கேட்டார். நாங்கள் உங்களுடைய வருமானமே மாதம் ரூ.3000/தான். உங்களுக்கு கஷ்டம் தர விரும்பவில்லை என்றோம்..இது தானா காரணம்! இந்தாருங்கள் பணம் என்றார்.ஏது பணம் என்றோம்.என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தைவிட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச்சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப்பார்க்கவேண்டும்..தாஜ்மகாலைப்பார்க்கவேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச்சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காணவேண்டும் என்று கண்கலங்கச்சொன்னது இன்று நினைத்தால் கூட கண்கலங்குகிறது. ஒரு படிக்காத ஏழைத்தாயைகூட நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் ஆளுமை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பதையும்,அவருடைய பிற ந்த நாளை உலக மாணவர் தினமாகவோ அல்லது இந்திய இளைஞர் தினமாகவோ கொண்டாடவேண்டும் என்பது மிகவும் பொருத்தமானதாகும்.

உலக அதிசியமான தாஜ்மகாலை மட்டுமல்ல இ ந்தியாவின் தலை நகரமான டெல்லியை மாணவச்சமுதாயம் பார்க்கவேண்டும்..இந்தியாவின் முகலாயர்கால 700ஆண்டுக்கான வரலாற்றுச்சின்னங்கள் பெரும்பாலும் அங்கேதான் உள்ளன.இந்தச்சுற்றுலாவுடன் நாங்கள் ,ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வலியுறுத்திய நீர் மாசுபாடு, நீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வையும் நாங்கள் செல்லும் இடங்களில் பரப்ப விரும்பினோம். இரண்டு பேருந்தில் விழிப்புணர்வு வாசக பேனர்களையும் கட்டிக்கொண்டோம். 105 மாணவிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது சுலபமாக கூட்டத்தில் அடையாளம் தெரிய 105 மாணவிகளுக்கும் டீம் ஸ்பிரிட் கம்பெனி நிர்வாகம் பனியனில் அப்துல்கலாம அவர்களின் போட்டோவுடன் அவருடைய புகழ்பெற்ற கவிதையை யும் அச்சிட்டு தந்தனர்.(அதைத்தான் மாணவிகள் அணி ந்துள்ளனர்.)
.


நான் உட்பட 10 ஆசிரியைகள்,3 ஆசிரியர்கள் மற்றும் 105 மாணவிகள் 24-09-2005 அன்று டெல்லி சென்றோம். ஆக்ரா சென்று தாஜ்மகாலைப்பார்த்த மாணவிகள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆரவாரம் செய்து தாங்கள் இது வரை சினிமாவில் மட்டுமே பார்த்த உலக அதிசியத்தை நேரில் கண்டதால் இது உண்மையா அல்லது கனவா எனக்கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். இதே நிலைமைதான் செப் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவுடனும் நிகழ்ந்தது.


மேண்மைமிகு நமது அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாகும் முன்பு,வெளி நாட்டு அதிபர்களுக்காகவும்,பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்ட மிகப்பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையின் கதவுகள் இவர் வ ந்த பின்புதான்ஆயிரக்கணக்கான மாணவர்களுக்காகவும்,சாமானிய மக்களுக்காகவும் திறக்கப்பட்டது. உள்ளே சென்றவுடன் மென்மையான இனிமையான இசையை இசைக்கலைஞர்கள் இசைத்து வரவேற்றனர். அனைவருக்கும் ஜிலேபி,இட்லியும்,வடையும், காபியும் தரப்பட்டு, மன்னர்களின் தர்பார் மண்டபம் போல காட்சியளித்த அறையில் அமரவைக்கப்பட்டோம்.
சிறிது நேரத்தில் இந்திய மாணவச்சமுதாயத்திற்கு தனது உரையின் மூலமும்,எழுத்தின் மூலமும் கனவு காணுங்கள்..கனவு ஒரு நாள் நிறைவேறும் எனக்கூறி ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி அவர்கள் உள்ளே வ ந்தார். வ ந்தவுடன் மாணவிகளிடம் சென்று டிபன் சாப்பிட்டீர்களா எனக்கேட்டு இ ந்திரலோகத்து பதவியில் அமர் ந்தாலும் தமிழர்களின் விருந்தோம்பலுக்கு உதாரணமாக மாணவிகளிடம் கேட்டது மட்டுமில்லாமல் சாப்பிட்டதைச்சொல்லு எனக்கேட்டு உறுதியும் படுத்திகொண்டார்.பள்ளியின் 6000-ம் மாணவிகளின் சார்பாக ஓவிய ஆசிரியை திருமதி.வளர்மதி அவர்கள் 1500 அமெரிக்கன் டைமண்ட் மூலம் உருவாக்கிய அவருடைய உருவப்படத்தை அவருக்கு வழங்கியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். கற்பகம் என்ற ஆசிரியை அவரைப்பற்றி வாசித்த கவிதியை மெய்மற ந்து ரசித்தார்.
எமது பள்ளி மாணவிகளிடம் 40 நிமிடம் கேள்விகள் கேட்டு உரையாடினார்.அவர் பேசும்போது கூறியது,35 சதமாக இருந்த காடுகள் 16 சதமாக குறைந்துவிட்டது.எனவே பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொருவரும் தலா 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.


நம் நாடு 5 துறைகளில் முன்னேற வேண்டியுள்ளது. 1. விவிசாயம்,உணவு பதப்படுத்துதல்,. 2.ஆரோக்கியம்,பெண்கல்வி. 3.தகவல் தொழில் நுட்ப வசதி கிராமங்களுக்கும் கிடைத்தல்,4. நீர் மின்சாரம் 5.சொ ந்தக்காலில் நிற்கும் வேலை வாய்ப்பு ஆகும்.
நீங்கள் எல்லாம் திருப்பூரில் இருந்து வ ந்துள்ளீர்கள்..படித்து முடித்தவுடன் வேலை தேடுபவராக இல்லாமல் ஒவ்வொருவரும் பலபேர்களுக்கு வேலை தருகின்ற தொழிலதிபர்களாக வரவேண்டும்..இ ந்தியா வளர் ந்த நாடாக மாறுவது உங்களைப்போன்ற மாணவ சமுதாயத்தினர் கைகளில் தான் உள்ளது எனக்கூறி தோட்டத்தில் வ ந்து ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் .இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் மாணவச்சமுதாயத்தைப்பற்றியும், இந்தியா வளர்ந்த நாடாக மாறவும், நீடித்த வளர்ச்சியடைய இவரைப்போல சிந்தித்து செயல்பட்டவர் வேறு எவரும் இல்லை.. எனவே அவருடைய பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக இ ந்தியரசும், குறிப்பாக தமிழகரசும் மாபெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். இது தான் மாணவச்சமுதாயம் எதிர்பார்க்கிறது.

வாழ்க பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்!

Comments

  1. மிக மிக அருமையான பகிர்வு.

    //நாமெல்லாம் டெல்லி போய் அவரைப்பார்த்தமில்லையா?அதை உங்கள் பிளாக்கில் போட்டு கொண்டாடுவோம் என்றார்.//

    அந்த மாணவிக்கு நன்றி.

    மகளை சுற்றுலாவுக்கு அனுப்புகையில் தாய் சொன்ன வார்த்தைகள் நெகிழ்வு.

    தாஜ்மகாலைக் கண்டு மாணவியர் குதூகலித்தது, ஜனாதிபதியைச் சந்தித்து அளவளாவியது என அத்தனையையும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி சகோதரி..

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் சுய விபரம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. நல்வாழ்த்துகள். வாய்ப்பு இருக்கும் போது தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

    கமெண்ட் போடும் போது வரும் ஆங்கிலச் சொல் தேவையில்லை. அதை நீக்கீ விடுங்கள். பலரும் சோம்பேறித்தனமாய் நகர்ந்து விடுவார்கள்

    ஜோதி கணேசன்

    texlords@gmail.com

    ReplyDelete
  4. ரொம்ப அருமையான பகிர்வு..

    //என்னால் முடியாததை என் மகள் காணவேண்டும் என்று கண்கலங்கச்சொன்னது இன்று நினைத்தால் கூட கண்கலங்குகிறது//

    நெகிழ வைத்துவிட்டார் அந்தத்தாய்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..